ஆசியா

வடகொரிய ஒலிபெருக்கிகளின் இரைச்சலால் தென்கொரிய எல்லையயில் உள்ள மக்கள் அவதி

வடகொரியாவின் ஒலிபெருக்கிகளால் ஏற்படும் இரைச்சலால், தென்கொரிய எல்லையில் வசிப்பவர்கள் பல மாதகாலமாக அவதியுறுகின்றனர். இதனால் தங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் புலம்புவதை உள்ளூர் அரசாங்கங்கள் வியாழக்கிழமை (நவம்பர் 21) தெரிவித்தன.

தென்கொரியாவின் கியோங்கி மாநிலம், கிம்போவில் மக்களின் மனநலனைக் கண்டறிய அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், 28 சதவீதமானோர் கடும் மனநலப் பிரச்சினைகளைச் சந்திப்பது தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 8 முதல் 14 வரை கிம்போ நகரின் மனநல நிலையம் நடத்திய அந்த ஆய்வு, இரு கொரியாக்களின் எல்லையில் வசிக்கும் 102 பேரின் மனநலனைக் கண்டறிய முற்பட்டது.

பெரும்பாலும் முதியவர்களைப் பாதிக்கும் இரைச்சலால் அவர்களிடம் தூக்கமின்மை, மனவுளைச்சல், பதற்றம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த செப்டம்பரில் ஒலிபரப்புகள் தொடங்கியதிலிருந்து இத்தகைய அறிகுறிகள் குறித்து தகவல்கள் வெளியாகின.

(Visited 56 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!