மத்திய கிழக்கு

லெபனானில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் : தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள்!

இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் லெபனானில் உள்ள ஒரு மில்லியன் மக்கள் அவரிகளின் வீடுகளில் இருந்து வெளியேறியிருக்கலாம் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

“இது நடந்திருக்கக்கூடிய மிகப்பெரிய இடப்பெயர்வு இயக்கம்” என்று லெபனான் பிரதமர் நஜிப் மிகாடி தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது அதிக ராக்கெட்டுகளை ஏவி தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உயர்மட்ட இராணுவத் தளபதி அலி கராக்கி மற்றும் மூத்த மதகுரு ஷேக் நபில் கௌக் ஆகியோரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனானின் பிரதம மந்திரி மிகாட்டி கூறுகையில், வான்வழித் தாக்குதல்களின் அலை பெய்ரூட் மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!