செய்தி

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவைவிட்டு வெளியேறும் மக்கள்!

இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுகளுக்குப் பிறகு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைப் பார்ப்பது “முற்றிலும் இதயத்தை உடைப்பதாக காசா நகர பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் பிரதேசத்தின் மிகப்பெரிய குடியிருப்புப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் அதே வேளையில், காசாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

காசா நகரத்தின் தெற்கே உள்ள பகுதிகள் ” பாதுகாப்பானவை அல்ல” என்பதால், வெளியேற்ற முடிவு கடினமானது எனவும் தற்போதைக்கு ஒரு சில குடும்பங்கள் வடக்கில் தங்குவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“நான் வீட்டை விட்டு வெளியேறினால், உங்கள் உயிரைத் தவிர இழப்பதற்கு எதுவும் இல்லை என்று நான் உணர்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகளில் பல நாடுகள் முடிவெடுத்துள்ளன. இத்தாலி அதன் முடிவை அறிவிப்பதில் தாமத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் ஒன்றுக்கூடிய ஆயிரகணக்கான மக்கள் பேரணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி