செய்தி

சிங்கப்பூரில் வேறு நபர்கள் பயன்படுத்திய ஆடைகளை அணிய ஆர்வம் காட்டும் மக்கள்

சிங்கப்பூரில் வேறு நபர்கள் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அணிவதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பழைய பொருட்களை விற்கும் கடைகள் வியாபாரம் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 50 சதவீதத்திற்கு மேல் கூடியிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

மற்றவர்கள் அணிந்த ஆடைகளை வாங்கி அணிவது என்பது முன்பெல்லாம் சிலரை முகம் சுளிக்க வைக்கும்.

இப்போது அந்தப் போக்கில் மாற்றம் தெரிகிறது. நோன்புப் பெருநாள் போன்ற பண்டிகைக் காலங்களிலும் மற்றவர்கள் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அணிவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

புதிய ஆடைகளைவிட விலை குறைவு, சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனப் பல காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் அத்தகைய ஆடைகளை நாடுகின்றனர். ஏதேனும் பொக்கிஷம்கூடக் கிடைக்கலாம் என பலர் தெரிவித்துள்ளனர்.

குறைந்த விலையில் நிறைவான வகையில் பொருள் வாங்கும் போக்கு வயது பாராது அனைவரையும் ஈர்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!