ஆசியா

அந்தமானில் இன்று அதிகாலையில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி!

அந்தமான் தீவில் கடந்த 10 நாட்களில் 2வது முறையாக இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 1ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த மக்கள் உடனடியாக தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் மறுநாள் 2ம் திகதி அந்தமான் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. கேம்ப்பெல் பே இல் என்ற இடத்தில் இருந்து 487 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் உள்ள அலிபுர்துவார் என்ற இடத்தில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவில் பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பிற்கான தேசிய மையம் அறிவித்தது. இந்நிலையில் அந்தமான் தீவில் இன்று காலை 7.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. ஆனால், இதனால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து, தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

(Visited 9 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content