இலங்கை செய்தி

26ஆம் திகதி பெரும் சுனாமி ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள்

எதிர்வரும் பௌர்ணமி தினத்தில் சுனாமி ஏற்படக் கூடும் என மக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுனாமி, நிலநடுக்கம் ஏற்படும் நேரத்தையோ, திகதியையோ யாராலும் கணிக்க முடியாது என எங்கள் விசாரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 26, 2004 அன்று, பௌர்ணமி தினத்தில் , இலங்கை உட்பட பல நாடுகளை பாதித்த சுனாமி ஏற்பட்டது.

இந்த ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி பௌர்ணமி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட்டால் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் அமைப்பு நாட்டில் இருப்பதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

இதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!