ஐரோப்பா

உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட போர் குற்றம் பற்றிய விசாரணையில் தயக்கம் காட்டும் பென்டகன்!

உக்ரைனில் ரஷ்ய போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளை பாதுகாப்புத் துறை தடுக்கிறது என  ஒரு மூத்த அமெரிக்க தூதர்  தெரிவித்துள்ளார்.

உலகளாவிய குற்றவியல் நீதிக்கான வெளியுறவுத்துறையின் தூதர் பெத் வான் ஷாக், செனட் வெளியுறவுக் குழுவின் விசாரணையில், உக்ரைனில் சந்தேகிக்கப்படும் அட்டூழியங்கள் பற்றிய விசாரணை குறித்து  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளை பென்டகன் தடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் ஒத்துழைத்தால் வெளிநாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று பென்டகன் கவலை கொண்டுள்ளது.

ஆகவே உக்ரைனைப் பற்றிய தகவல்களை ஐசிசியுடன் பகிர்ந்து கொள்வதில் பென்டகன் தயக்கம் காட்டியதாக நியூயார்க் டைம்ஸ் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்