இலங்கை செய்தி

வாக்களிக்க விடுப்பு கொடுக்காத நிறுவனங்களின் முதலாளிகளுக்கு அபராதம்

தனியார் துறை மற்றும் அரை பொதுத்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களையும் பாஃப்ரல் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இந்தச் சட்டத்தை உதாசீனப்படுத்திய எந்தவொரு முதலாளியும் நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் ரூபா அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு பணியாளர்களை பாஃபரல் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!