இலங்கை

புலிகளுடனான சமாதானப் பேச்சுகள் – தூசுத்தட்ட மீண்டும் தயாராகும் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் குறித்த புத்தகமொன்றை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட உள்ளார்.

‘The Sri Lanka Peace Process: An Inside View’ என்ற பெயரில் இந்த புத்தகத்தை அவர் வெளியிட உள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முக்கிய விவரங்களை இந்தப் புத்தம் வெளிப்படுத்தும் என புத்தகத்தை வெளியிட உள்ள விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா, காசா பகுதி மற்றும் உக்ரைனில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான அமைதி முயற்சிகளை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வரும் இந்த தருணத்தில், பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இந்தப் புத்தகம் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் கூறியுள்ளது.

30 ஆண்டுகால கொடூரமான மோதல் முடிவுக்கு வரும் என்ற பரவலான சர்வதேச எதிர்பார்ப்புக்கு மத்தியில், செப்டம்பர் 16, 2002 அன்று தாய்லாந்தில் இருதரப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் ஆரம்பமாகின.

சர்வதேச ஆய்வுகள், கட்டமைப்பு பலவீனங்கள், போட்டி நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் சரிவதற்கு வழிவகுத்த அரசியல் பலவீனம் ஆகியவற்றின் மத்தியில், மிகவும் சிக்கலானதாக சமாதான பேச்சுகள் முடிவுக்கு வந்திருந்தன.

இந்த புத்தகம் அந்த பயணத்தை விரிவாக ஆராய்கிறது. இது சமாதான செயல்முறையின் வடிவமைப்பு, அதன் பலங்கள் மற்றும் உள்ளார்ந்த குறைபாடுகள், அடையப்பட்ட சாதனைகள் மற்றும் அதன் தோல்விக்கு வழிவகுத்த காரணிகளையும் பகுப்பாய்வு செய்கிறது என்றும் விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் கூறியுள்ளது.

TK

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!