இலங்கை

அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற குடும்பங்களுக்கும் கொடுப்பனவுகள்!

அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற 393,094 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1,280,000 குடும்பங்கள் நலன்புரி நலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அது முடிந்தவுடன் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது 1,792,265 குடும்பங்கள் நலன்புரிப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்களாக உள்ளதாகவும் அவர்களில் 9,046,612 குடும்பங்கள் நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் பின்னர் அந்த இலக்கை எட்ட முடியும் எனவும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, உதவி பெறும் முதியோர், சிறுநீரகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, முந்தைய முறையிலேயே உரிய பணம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி முதியோர் கொடுப்பனவுகளை தபால் நிலையங்களிலும் சிறுநீரக மற்றும் ஊனமுற்றோருக்கான கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இதுவரை சுமார் 10 இலட்சம் கணக்குகளின் விபரங்கள் நலன்புரிப் பலன்கள் சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், தகுதியுடையவர்கள் விரைவில் கணக்கை ஆரம்பித்து பலன்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதற்காக, பொது விடுமுறை நாட்களிலும் அரசு வங்கி அமைப்பு திறந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content