ஐரோப்பா

ஜெர்மனியில் கொடுப்பனவில் மாற்றம் – வெளியான முக்கிய தகவல்

ஜெர்மனியில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

ஜெர்மனியில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வநதுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஆடி மாதத்தில் இருந்து புதிய நடைமுறை மூலமாக இதற்கு விண்ணப்பம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜெர்மனியின் தொழில் மந்திரி வுபேட்டஸ் கயில் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.

ஜெர்மனியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வந்த காலங்களில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.

அதனால் பல மக்கள் தங்களது வேலை வாய்ப்பபை இழந்து வீடுகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த கால கட்டத்தில் மொத்தமாக தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்காக 35.5 பில்லியன் யுரோக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 6 மில்லியன் மேற்பட்டவர்கள் முற்று முழுதாக வேலை இழப்பதில் இருந்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கின்றார்.

இதேவேளையில் தற்பொழுது மொத்தமாக 1 லட்சத்து 62 ஆயிரம பேர் மட்டுமே தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!