ஆசியா செய்தி

சிங்கப்பூர் விமான ஊழியருக்கு பயணியால் நேர்ந்த கதி – தாமதமடைந்த விமானப் பயணம்

ஹொங்கொங்கிலிருந்து சிங்கப்பூருக்கு பயணிக்கவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் பயணி ஒருவரின் செயலால் பயணம் சுமார் 3 மணிநேரம் தாமதமடைந்துள்ளது.

விமான ஊழியரை பயணி ஒருவர் தனது வார்த்தைகளால் துன்புறுத்தியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி ஹொங்கொங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படவிருந்தது.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் 71 வயது நபர் ஊழியரிடம் தமக்கு மதுபானம் தரும்படிக் கேட்டிருக்கிறார்.

அதன் தொடர்பில் நபர் ஊழியரை கடுமையான வார்த்தைகளால் துன்புறுத்தியதாக நம்பப்படுகிறது.

இரவு மணி 8.25க்கு மணிக்குப் புறப்படவிருந்த விமானம் 11.38க்குப் புறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கைது செய்யப்படவில்லை என்று ஹொங்கொங் உள்ளூர்ச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!