ஐரோப்பா செய்தி

6,000 அடி கீழிறங்கிய லண்டன் சென்ற விமானம் – திகில் அனுபவத்தை பகிர்ந்த பயணி

சிங்கப்பூரில் இருந்து லண்டன் நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஆட்டங்கண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விமானம் மிக மோசமாக ஆட்டங்கண்டதில் பயணிகள் சிலர் இருக்கைகளுக்கு உயரே பெட்டி வைக்குமிடத்தில் இடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் ஆட்டங்கண்டபோது அவர்கள் இருக்கையின் பெல்ட் அணியாமல் இருந்ததாகக் கூறப்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானம் ஆட்டங்கண்டதைப் பற்றி செய்தி நிறுவனத்திடம் பேசினார்.

“திடீரென்று விமானம் மேல்நோக்கிப் பறந்தது. பிறகு விமானம் ஆடியது. திடீரென்று விமானம் கீழறங்கியது,” என்று அந்தப் பயணி பகிர்ந்துகொண்டார்.

சிலரின் தலை விளக்கும் முகக்கவசமும் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் போய் இடித்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லண்டனிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட அந்த விமானம் ஆட்டங்கண்டதில் ஒருவர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

30 பேருக்குக் காயம் விளைவிக்கப்பட்டது. மருத்துவமனையில் 18 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

12 பேர் சிகிச்சை பெறுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Facebook பக்கத்தில் தெரிவித்தது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content