ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

சீனாவில் விமானத்தில் விட்டுச்செல்லப்பட்ட ஊசியால் விபரீதம் – 18,000 டொலர் இழப்பீடு கோரும் பயணி

விமானத்தில் விட்டுச்செல்லப்பட்ட ஊசி தம்மைக் குத்தியதால் நபர் ஒருவர் இழப்பீடாக 18,000 டொலர் கோரியுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த அவரை ஊசி குத்தியதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சுவதாகவும் அதற்கு இழப்பீடு கேட்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சீனா சௌதர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த அவர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது தம்முடைய கைத்தொலைபேசியை எடுக்க முயன்ற போது ஊசி ஒன்று அவரைக் குத்தியது.

நபரின் விரலில் அந்த ஊசி குத்தியது. அது இன்சுலின் (insulin) ஊசியாக இருக்கலாம் என்று அந்த நபர் சந்தேகிக்கின்றார்.

விமான ஊழியர்கள் அவருக்கு உதவிய போதிலும் அந்தச் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்தவர் ஒருவர் அந்த ஊசியை விட்டுச்சென்றது பிறகு உறுதிசெய்யப்பட்டது.

விமானம் தரையிறங்கியவுடன் அவருடைய விமானச்சீட்டிற்கு 250 டொலரும் நடந்த சம்பவத்திற்குக் கூடுதலாக 138 டொலரும் விமான நிறுவனம் வழங்க முன்வந்தது. ஆனால் அது போதாது என்று கூறி அந்த நபர் அந்தத் தொகையை மறுத்துவிட்டார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!