இலங்கை

இலங்கைக்கு பயணித்த விமானத்தில் பயணி ஒருவரின் மோசமான செயல்

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பிரவேசித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மதுபோதையிலிருந்த பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக இம்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண்கள் இருவரும் சம்பவம் தொடர்பில் விமானிக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து விமானி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

விமானம் தரையிறங்கியதன் பின்னர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்