பம்பலப்பிட்டி மெரைன் ட்ரைவ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை

கொழும்பு பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோர வீதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (05) முதல் அந்த வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே அவ்விடத்திலிருந்து பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)