இலங்கை : நாடாளுமன்றம் அமர்வு தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன், அரசியலமைப்பின் 70 வது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 2 visits today)