இலங்கை செய்தி

நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடைந்துள்ளன

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடைந்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவே அது வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம்  முடிவுக்குகொண்டுவரப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு பெப்ரவரி 7ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என ஜனாதிபதி தனது வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் விதிமுறைகள் முடிவடைந்தவுடன், அதுவரை செயல்பாட்டில் இருந்த அனைத்து குழுக்களும் கலைக்கப்படும், COP மற்றும் COPA குழுக்களும் அவற்றில் அடங்கும்.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!