இலங்கை

இலங்கையின் கடன் சீர்த்திருத்த முயற்சிகளை பாராட்டும் பரிஸ் கிளப்!

இலங்கை நிலையான வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு தேவையான சீர்திருத்தங்களை அமுல்படுத்த இலங்கை அதிகாரிகளின் முயற்சிகள் பாராட்டுக்குரியது என இலங்கை கடன் வழங்குநர் குழுவை உள்ளடக்கிய பரிஸ் கிளப் கூறுகிறது.

நேற்றைய தினம் இலங்கை மேற்கொண்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் இன்று (27) பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் சளைக்காமல் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், இலங்கை நேற்று செய்து கொண்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை அமெரிக்கா வரவேற்பதாக எக்ஸ் ஸ்பேஸில் எழுதியுள்ள குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஒப்பந்தங்கள் நாட்டின் நிதிச் சூழலில் நம்பிக்கையை வளர்க்க உதவும் என்று அவரது குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்