பிரித்தானியாவிற்கு எதிராக செயற்படும் பாலஸ்தீன ஆதரவு அமைப்பு – இலக்கு வைக்கப்பட்ட இடங்கள்!

பாலஸ்தீன ஆதரவு அமைப்பான பாலஸ்தீன அதிரடி, பிரிட்டிஷ் இராணுவ தளங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்ட அலையை ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த குழு சமீபத்தில் RAF பிரைஸ் நார்டனுக்குள் ஊடுருவி பல இராணுவ விமானங்களை சேதப்படுத்தியது. இதன்பின்னர் ஒரு ரகசிய விசாரணை அவர்களின் எதிர்கால இலக்குகளை வெளிப்படுத்தியுள்ளது.
பயங்கரவாத அமைப்பாக குழு தடை செய்யப்படவுள்ள நிலையில், புதிய உறுப்பினர்களை சேர்க்க அவர்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
ரகசிய கூட்டத்தில், குழுவின் ஆதரவாளர்கள் “நர்சரி ஆசிரியர்கள் முதல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரை” 18 முதல் 80 வயது வரையிலான பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணை அதிகாரிகள் மேற்கோள் இட்டுள்ளனர்.
இலக்கு வைக்கப்பட்ட வசதிகளை சீர்குலைக்க குறித்த நபர்கள் மூலைசளவை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.