சண்டை நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் – பதிலடி கொடுக்க உத்தரவிட்ட இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை பாகிஸ்தான் மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியது.
இந்த சண்டை நிறுத்த மீறலை நிறுத்த பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தாா்.
பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.
இந்நிலையில், அமெரிக்க சமரசத்தின்பேரில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அவரது வெளியான சிறிது நேரத்தில் மத்திய அரசும் சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.
சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே அதை மீறி ஜம்மு-காஷ்மீா் மற்றும் குஜராத்தின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மூலம் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.
பாகிஸ்தானின் அத்துமீறலால் எல்லையையொட்டிய மாநிலங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதலைத் தொடா்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, எல்லை மாநிலங்கள் மீண்டும் இருளில் மூழ்கின. அந்த மாநிலங்களின் தலைமைச் செயலா்களுடன் மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.