நிதி நெருக்கடியால் போர் விமானங்களை விற்கும் பாகிஸ்தான்!

போர் விமானங்களை விற்பதன் மூலம் நிதிநெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்வனவு செய்த 1.1 பில்லியன் மதிப்புடைய போர் விமானங்களை, ஈராக்கிற்கு விற்பனை செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர சர்வதேச நாயண நிதியத்தின் உதவியை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)