இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நீட்டித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை செப்டம்பர் 23 வரை மேலும் நீட்டித்துள்ளனர்.
பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறப்பதற்கான தடையை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவிக்கும் ஒரு புதிய NOTAM ஒன்றை வெளியிட்டுள்ளது.
“இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட இராணுவ மற்றும் சிவிலியன் விமானங்களுக்கும் இந்தத் தடை அமலில் உள்ளது” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 23 அன்று ஒரு மாதத்திற்கு இந்தத் தடை முதலில் விதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் பறப்பதைத் தடை செய்தது. சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 30 அன்று, பாகிஸ்தான் விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கான பரஸ்பர வான்வெளி மூடலுடன் இந்தியா பதிலளித்தது.