ஜெர்மனிக்கு செல்ல காத்திருந்த ஆப்கானியர்கள் பலர் பாகிஸ்தானில் கைது

பாகிஸ்தானில் ஜெர்மனியால் தஞ்சம் வழங்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் பாகிஸ்தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத்திலும், பெஷாவரிலும் நடத்தப்பட்ட சோதனைகளில், குறைந்தது 20 பேர் நாடுகடத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விசா கிடைக்காமல் தங்கியுள்ளவர்கள் ஏற்கனவே தங்கள் பெட்டிகளை தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சிலர் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், பலரைத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஜெர்மன் அரசும், நாட்டின் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சுகளும், இந்த நாடுகடத்தல்களைத் தடுக்க முயற்சித்து வருகின்றன.
பசுமைக் கட்சி உறுப்பினர் ஷாஹினா காம்பீர் இது குறித்து கடுமையாக விமர்சித்து, “மத்திய அரசு மக்கள் உயிரைக் கூட புறக்கணிக்கிறது” என தெரிவித்தார்.
ஜெர்மனியில் தஞ்சம் வழங்கப்பட்ட ஆப்கானியர்களில், 350 பேர் ஜெர்மன் நிறுவனங்களின் முன்னாள் உள்ளூர் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினராக இருக்கின்றனர்.