ஆசியா

பாகிஸ்தான் :3 மாதங்களாக நரக வேதனை…தந்தையை சுட்டு கொன்ற மகள்!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் குஜ்ஜார்புரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மீது கொலை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அந்த சிறுமி, துப்பாக்கியை பயன்படுத்தி அவருடைய தந்தையை சுட்டு கொன்றுள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி சொஹைல் கஸ்மி கூறும்போது, அந்த சிறுமி 3 மாதங்களாக நரக வேதனையை அனுபவித்து உள்ளார். கடந்த 3 மாதங்களாக சிறுமியை, அவருடைய தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், தந்தையை கொலை செய்வது என முடிவு செய்து, அவருடைய துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார் என கஸ்மி கூறியுள்ளார். அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

லாகூரில் இன அடிப்படையிலான வன்முறை கோர்ட்டு ஒன்றில், சிறுமியான மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் இந்த சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. கூடுதல் செசன்ஸ் நீதிபதி மியான் சாஹித் ஜாவித், குற்றவாளியான ரபீக்குக்கு கடந்த வெள்ளி கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!