131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி உள்ளிட்டோரும் மேற்படி பட்டியலில் உள்ளனர்.
இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெற உள்ள விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குவார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள்.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஆகிய 3 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், சமூக சேவைஉள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.





