நாடு தழுவிய சோதனை நடவடிக்கை ; 882 பேர் கைது
“முடு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நாளாந்த சோதனை நடவடிக்கையின்போது நேற்று 882 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 9 சந்தேக நபர்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அத்துடன், ஒருவர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையின்போது 400 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 11 கிராம் ஐஸ் மற்றும் 500 கிராம் கொக்கைன் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.





