ஐரோப்பா

இங்கிலாந்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்படும் அமைப்பு’!

பிரித்தானியாவில் மிகவும் கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல் படைகள் அன்றாட குற்றங்களைச் சமாளிப்பதில் கவனம் செலுத்தவும் பிரிட்டிஷ் FBI” உருவாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அறிவிப்பை  உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத்  இன்று அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்தக் குழுவானது  பயங்கரவாதம், மோசடி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போன்ற குற்றச் செயல்களை கண்காணிக்க  உதவும் என எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தேசிய காவல் சேவை (NPS) நிறுவப்படும் என்றும்,  NPS “உலகத் தரம் வாய்ந்த திறமையாளர்களையும், தொழில்நுட்பத்தையும் ஈர்க்கும் எனவும் உயர்மட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த திட்டம்  செயற்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!