இலங்கை

இலங்கை : அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் போக்குவரத்து அமைச்சருமான  ஜீவன் தொண்டமான் உட்பட பல சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த நுவரெலியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் (30) களனி பள்ளத்தாக்கு கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள நுவரெலியா தேயிலை தொழிற்சாலைக்குள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (22.07) இது தொடர்பான உண்மைகளை பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்த. இதனைத் தொடர்ந்து   மாஜிஸ்திரேட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நுவரெலியா பொலிஸார் எழுத்து மூலம் அறிவித்திருந்த போதிலும் சந்தேகநபர்கள் எவரும் நீதிமன்றில் ஆஜராகாததால் தோட்ட நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!