இலங்கை செய்தி

ஹிருணிகாவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, ​​நீதிமன்றில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர, சுகவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அப்போது, ​​சுகவீனம் தொடர்பான மருத்துவச் சான்றிதழை நீதவான் கேட்டதுடன், அதை ஆஜர்படுத்தாததால், சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என, நீதவான் அது தொடர்பான பிடியாணை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஏனைய 10 சந்தேகநபர்களும் திறந்த நீதிமன்றில் முன்னிலையாகினர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!