இலங்கையில் பாடசாலை நேரத்தை நீட்டிப்பதற்கு எதிர்ப்பு!
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை நீட்டிக்கும் திட்டத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று (24) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்க பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் அதிகாரிகள் முடிவை திருத்தத் தவறினால், வரவிருக்கும் பாடசாலை பருவத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவோம் என்று எச்சரித்துள்ளனர்.
கல்வியாளர்களுடன் முறையான ஆலோசனை இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் வாதிட்டனர். மேலும் நீட்டிக்கப்பட்ட நேரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனவும் சுட்டிகாட்டியுள்ளனர்.
ஆசிரியர்களின் கவலைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது கல்வித் துறையில் பரந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவும், பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவும் கல்வி அமைச்சிடம் வலியுறுத்தினர்.





