இலங்கை

புயல் தொடர்பில் முன்பே அறிந்திருந்திருந்தும் மௌனம் காத்த எதிர்கட்சிகள்!

நவம்பர் 12 ஆம் திகதி முதல் புயல் குறித்த எச்சரிக்கைகளை எதிர்கட்சியினர் அறிந்திருத்தாகவும், ஆனால் அவர்கள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தாமல் மௌனம் காத்து வந்ததாகவும் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் புயல் குறித்த எச்சரிக்கையை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சி மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூறியது போல் நவம்பர் 12 ஆம் தேதி வானிலை ஆய்வுத் துறை அல்லது நீர்ப்பாசனத் துறை வெளியிட்ட புயல் குறித்த எந்த முன்னறிவிப்பும் அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை என்றும்  அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“எதிர்க்கட்சிகள், குறிப்பாக சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) ஆகியவை நவம்பர் 12 முதல் நவம்பர் 26 வரை 14 நாட்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டிருந்தன. அவர்களில் யாரும் அதை நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தகைய பேரழிவைத் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பது போலவே, எதிர்க்கட்சிக்கும் உள்ளது எனக் கூறிய அவர், அவர்கள் மக்களின் வாக்குகளாலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!