இலங்கை செய்தி

வரிக் கொள்ளையர்களுக்கு 30 ஆம் திகதி வரை வாய்ப்பு

வரி செலுத்தாமல் ஏமாற்றும் மதுபான உற்பத்தியாளர்களுக்கு அவற்றை மீளச் செலுத்த எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உரிய சலுகை காலத்தின் பின்னரும் வரி செலுத்தாமல் இருக்கும் மதுபான உற்பத்தியாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அவர்களின் உற்பத்தி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் ஏ.ஜே.குணசிரி தெரிவித்தார்.

கலால் திணைக்களத்துக்கு இதுவரை செலுத்த வேண்டிய நிலுவை பணம் 180 கோடியாக இருப்பதாக கலால் திணைக்களத்துக்கு நேற்று வரவழைக்கப்பட்ட மதுபான உற்பத்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வருடம் மதுபான வரியாக 23200 கோடி ரூபாய் உழைக்க எதிர் பார்க்கப்படும் அதே வேளை இதில் 16200 கோடி ரூபா திரைசேரிக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் இது கடந்தஆண்டை விட 5300 கோடி ரூபா அதிகமானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 62 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!