இந்தியா

அரபு நாடுகளில் புதிதாக திறக்கப்படும் இந்தியப் பள்ளிகள்!

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல வெளிநாடுகளில் இந்தியர்கள் கணிசமாக வாழ்ந்து வந்தாலும், அரபு நாடுகளில்தான் மிக அதிகமாக இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், கத்தார், குவைத் போன்ற அரபு நாடுகளில் பணிபுரிய செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களில் பலர், சில வருடங்களில் தங்கள் குடும்பத்தினரையும் அங்கு கூட்டிச் செல்கின்றனர்.

இதனால் அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அவர்களின் பிள்ளைகளும் அங்கேயே கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே, அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்கேயே இந்தியப் பள்ளிகளை தொடங்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில், அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த பணிக்கு மத்திய அரசு ஆதரவும், உதவியும் செய்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முரளிதரன், “வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரமாக கல்வியை கொடுக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றுமே மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. அந்த வகையில், அரபு நாடுகளில் இந்தியப் பள்ளிகளை தொடங்கவும் மத்திய அரசு உதவி செய்து வருகிறது. தற்போது ஏற்கனவே அரபு நாடுகளில் நிறைய இந்திய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஓரளவுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்படுகிறது” என முரளிதரன் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே