வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல்கலைகழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, 16 பேர் காயம்

தெற்கு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டஸ்கேகி பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று பல்கலைக்கழகம் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் அல்ல என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டஸ்கேகி பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து ஓபிலிகாவில் உள்ள கிழக்கு அலபாமா மருத்துவ மையம் மற்றும் மாண்ட்கோமரியில் உள்ள பாப்டிஸ்ட் சவுத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அது மேலும் கூறியது.

காயமடைந்தவர்களில், ஒரு மாணவி வயிற்றில் சுடப்பட்டதாக டஸ்கி நகர காவல்துறைத் தலைவர் மார்டிஸ் தெரிவித்தார்.

கைது எதுவும் அறிவிக்கப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று மார்டிஸ் மேலும் கூறினார்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்