இலங்கையில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

இலங்கை – கொட்டஹேன, பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (10) இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களில் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 43 வயதுடையவராவார். துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய குழுவைக் கண்டுபிடிக்க நான்கு போலீஸ் குழுக்கள் இப்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
(Visited 20 times, 1 visits today)