இலங்கை

இலங்கையில் பாணந்துறை கடலில் மூழ்கி ஒருவர் மாயம்: 11 பேர் மீட்பு!

பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பாணந்துறை, கெசல்வத்த, கெமுனு மாவத்தையை சேர்ந்த 18 வயதுடைய கேசன் சந்தருவன் என்ற இளைஞரே இவ்வாறு காணமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞன், தனது மூத்த சகோதரர், இரண்டு நண்பர்கள் மற்றும் எம்பிலிப்பிட்டிய பகுதியிலிருந்து சுற்றுலாவிற்கு வந்த எட்டு பேர் கொண்ட குழுவுடன், பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவர்கள் திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அச்சமயம், கடற்படை மற்றும் காவல்துறை உயிர்காப்பாளர்கள், மீட்புக் குழாய்கள் மூலம் கடலில் குதித்து அலையில் அடித்துச் செல்லப்பட்ட 11 பேரை மீட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!