வியட்நாமில் படகு விபத்தால் மாயமானவர்களில் சிறுவன் ஒருவர் பத்திரமாக மீட்பு!

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன ஒரு சிறுவன் மீட்புக் குழுவினரால் பல மணி நேரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டான்.
படகின் காற்றுப் பையில் சிக்கிய சிறுவன் மீட்புக் குழுவினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (20) காலை ஏற்பட்ட விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக நாட்டின் வடக்கில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான ஹா லாங் விரிகுடாவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, பெரும்பாலான பயணிகள் தலைநகர் ஹனோயைச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கனமழை தடையாக இருப்பதாக நாட்டில் உள்ள மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் படகில் 53 பேர் இருந்ததாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.