இலங்கை

பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதுடைய குறித்த நபர்காலி ரத்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜன.23 அன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த இன்டர்சேஞ்ச் அருகே, SUV வாகனத்தில் வந்த சிலர், வெள்ளை டிஃபென்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது நான்காவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!