வட அமெரிக்கா

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பலி

அமெரிக்காவின் நாஷ்வில்லே நகரில் அமைந்த பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுபற்றி நாஷ்வில்லே மெட்ரோ பொலிஸின் செய்தி தொடர்பாளர் வெதர்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, மர்ம நபர் துப்பாக்கியால் மாணவர்கள் 2 பேரை சுட்டு விட்டு,தன்னையும் அதே துப்பாக்கியால் சுட்டு கொண்டார் என்றார்.

எனினும், மாணவர்களின் நிலை என்னவானது என்பது பற்றியோ அல்லது துப்பாக்கி சூடு நடத்தியது மாணவரா? என்பது பற்றியோ எந்தவித தகவலையும் வெதர்லி வெளியிடவில்லை. எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட டொனால்டு டிரம்ப், அதன்பின் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையின்போது, நாட்டில் துப்பாக்கி கலாசாரத்திற்கு ஒரு முடிவு கட்டுவேன் என கூறினார். இந்நிலையில், பள்ளியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!