இலங்கை அனுராதபுரத்தில் பேருந்து தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழப்பு

உடமலுவ பொலிஸ் நிலையப் பகுதிக்குட்பட்ட ஜீதவனராமவை அண்மித்துள்ள முதியோர் மண்டபத்திற்கு அருகில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் இன்று அதிகாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து எம்பிலிப்பிட்டியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி மதக் குழுவினருடன் பயணித்துள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்ட போது அங்கிருந்தவர்கள் ஓய்வு மண்டபத்தில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பயணி ஒருவர் பேருந்திற்குள் இருந்த போது தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
(Visited 11 times, 1 visits today)