இலங்கை

இலங்கை அனுராதபுரத்தில் பேருந்து தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழப்பு

உடமலுவ பொலிஸ் நிலையப் பகுதிக்குட்பட்ட ஜீதவனராமவை அண்மித்துள்ள முதியோர் மண்டபத்திற்கு அருகில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் இன்று அதிகாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்து எம்பிலிப்பிட்டியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி மதக் குழுவினருடன் பயணித்துள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்ட போது அங்கிருந்தவர்கள் ஓய்வு மண்டபத்தில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பயணி ஒருவர் பேருந்திற்குள் இருந்த போது தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!