ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறையாக இலக்கமற்ற வங்கி அட்டைகள்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/AIDk875wLNnFoY1SaGmBaLZ8Qx8wsPp3esj5akTB-1024x683.webp.pagespeed.ce_.32Re25j-bI.webp)
ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறையாக இலக்கமற்ற கிரெடிட் மற்றும் டெபிட் அட்டை முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கு பதிலாக AMP ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது, இதில் வழக்கமான வங்கி அட்டையில் காணப்படும் எந்த எண்களும் இல்லை.
இதன் மூலம், வாடிக்கையாளர்களின் வங்கி அட்டை தகவல்களை எளிதாக அணுக முடியும்.
வழக்கமான வங்கி அட்டை அமைப்பு மூலம் பல நிதி மோசடிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் டோக்கன்கள் அமைப்பின் மூலம் பொருத்தமான கொடுப்பனவுகளை முறையாகச் செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் செல்பி வீடியோ தொழில்நுட்பம் மூலம் தங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.
இதன் மூலம் பல சைபர் குற்றங்களைத் தடுக்க முடியும் என்று வங்கி நிர்வாகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.