இலங்கை

என்.பி.பி. எம்பியால் எனக்கு கொலை மிரட்டல்: சபையில் கதறிய அர்ச்சுனா!

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சபாநாயகரிடம் இன்று முறையிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பியே இவ்விடயத்தை அர்ச்சுனா சுட்டிக்காட்டி இருந்தார்.

“ சபாநாயகரே, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் இன்று காலை சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன்.

எனது கேள்விகள் முடிவடைந்த பின்னர் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றேன். அங்கு வைத்து புத்தளம் மாவட்ட எம்.பி. பைசல் என்னை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்தார். கமரா இருந்தது. அதில் இது பதிவாகி இருக்கும். எனவே, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார் அர்ச்சுனா எம்.பி.

“ எனக்கு சாவதற்கு பயணம் இல்லை. ஆனால் மிரட்டல்களுக்கு அடிபணிய முடியாது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!