என்.பி.பி. அரசுடன் இணைவு: பொன்சேகா கூறுவது என்ன?
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து ஒருபோதும் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. எனினும், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு எனது ஆதரவு வழங்கப்படும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“இந்நாட்டை நாசமாக்கியதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடுகின்றனர். இந்த தரப்பை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
“இந்நாட்டை மேற்படி தரப்பினரே மாறி, மாறி ஆட்சி செய்தனர். இக்காலப்பகுதிக்குள் இவர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால். இனி என்ன செய்யபோகின்றனர்?” எனவும் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் அறிவித்துள்ளது.





