க.பொ.த உயர்தரத்திற்கான விண்ணப்பம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

கல்விப் பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்பது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்று (12) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகள் விண்ணப்பங்களை கோர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு படிக்கும் பாடசாலையில் பொருத்தமான பாடம் இல்லை என்றால், அந்த மாணவர்களுக்கு மற்ற பாடசாலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
(Visited 10 times, 1 visits today)