ஆசியா

எல்லை பகுதிகளில் அத்துமீறும் வடகொரியா : ஜி.பி.எஸ் சிக்னல்களை சீர்குலைப்பதாக குற்றச்சாட்டு!

வட கொரியா எல்லைப் பகுதிகளில் இருந்து ஜி.பி.எஸ் சிக்னல்களை இரண்டாவது நாளாக சீர்குலைத்ததாக தென் கொரிய இராணுவும் அறிவித்துள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதால், ஆயிரக்கணக்கான பலூன்களைப் பறக்கவிட்டு, தென் கொரிய எதிர்ப்புப் பிரச்சார துண்டுப் பிரசுரங்களை தெற்கில் வீசுவது போன்ற மின்னணு மற்றும் உளவியல் போரில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.  இந்நிலையில் ஜிபிஎஸ் சிக்னல்களைக் கையாளும் வட கொரிய நடவடிக்கைகள் மேற்கு எல்லை நகரமான கேசோங் மற்றும் அருகிலுள்ள நகரமான ஹேஜுவிலிருந்து கண்டறியப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

வட கொரியா எவ்வாறு ஜிபிஎஸ் சிக்னல்களில் தலையிடுகிறது அல்லது இடையூறுகளை ஏற்படுத்துகிறது என்பதை தென்கொரிய இராணுவம் விவரிக்கவில்லை.

“ஜிபிஎஸ் குறுக்கீடு ஆத்திரமூட்டல்களை உடனடியாக நிறுத்துமாறு வட கொரியாவை நாங்கள் வலியுறுத்துகிறோம், மேலும் அதன் விளைவாக ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் அது முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கை மாத்திரம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!