மத்திய கிழக்கு

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப் பயணிகளை வரவேற்கும் வடகொரியா

வடகொரியா மீண்டும் சுற்றுப்பயணிகளை வடகொரியா வரவேற்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனங்கள் பயணிகளை வடகொரியாவிற்குக் கொண்டுசெல்லும் முதல் தரப்பாக உள்ளன.

12 சுற்றுப்பயணிகள் இந்த மாதம் 20ஆம் திகதி வடகொரியாவின் ரசொன் நகருக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு செய்திருக்கும் முதல் மேற்கத்திய சுற்றுப்பயணிகளாக அவர்கள் உள்ளனர்.

4 நாள் பயணத்தில் பாடசாலைகள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வளாகங்கள் இருக்கும் சிறப்புப் பொருளியல் பகுதியை அவர்கள் பார்த்தனர்.

மேற்கத்திய சுற்றுப்பயணிகள் எல்லை தாண்டியிருந்தாலும் சீனக் குடிமக்களுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. கோவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலுக்கு முன் வடகொரியாவிற்குச் சென்ற சுற்றுப்பயணிகளில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் ரஷ்ய-உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து சீன-வடகொரிய உறவு நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிலையில் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்குச் செல்ல ரஷ்ய சுற்றுப்பயணிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

மாஸ்கோவுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையிலான உறவு மேம்படும் நிலையில் ரஷ்ய சுற்றுப்பயணிகள் சென்ற ஆண்டு பெப்ரவரியிலிருந்து பியோங்யாங்கிற்குச் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.