அமெரிக்கா, தென்கொரியாவிற்கு பதிலடி : புதிய விமான எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!

புதிய விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இன்று (21.03) சோதனை செய்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைவர் கிம் ஜாங் உன் நேற்று சோதனைகளை மேற்பார்வையிட்டதாகவும், ஏவுகணைகள் வட கொரியாவிற்கான “மற்றொரு பெரிய பாதுகாப்பு ஆயுத அமைப்பு” என்று அழைத்ததாகவும் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வட கொரியா மேற்கொண்ட ஆறாவது சோதனை நடவடிக்கை இதுவாகும்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து நட்பு நாடுகளின் முதல் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியாக 11 நாள் ப்ரீடம் ஷீல்ட் என அழைக்கப்படுகின்ற பயிற்சியை தென்கொரியாவுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் தங்கள் ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகளை இயற்கையில் தற்காப்பு என்று விவரிக்கின்றனர்.
ஆனால் வட கொரியா அவற்றை ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று குற்றம் சாட்டுகிறது.