தென்கொரியாவிற்கு பலூன் மூலம் குப்பைகளை அனுப்பிய வடகொரியா!
சமீபகாலமாக வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் வடகொரிய குப்பை ஏந்திய பலூனை தென்கொரியாவை நோக்கி பறக்கவிட்டுள்ள நிலையில் குறித்த பலூன் தென்கொரிய ஜனாதிபதி வளாகத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“பாதுகாப்பு ஆய்வுக்குப் பிறகு, விழுந்த பொருள்களில் ஆபத்து அல்லது தொற்று இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை வடகொரியாவின் குப்பை பலூன் ஒன்று தென்கொரிய அதிபர் அலுவலக வளாகத்திற்குள் விழுந்தது இது இரண்டாவது முறையாகும்.
(Visited 34 times, 1 visits today)





