உலகம் செய்தி

வட கொரிய எல்லையைத் தாண்டிய அமெரிக்க வீரரை நாடு கடத்த உத்தரவு

வடகொரிய எல்லையை தாண்டிய அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரை அந்நாட்டில் இருந்து நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ட்ரவிஸ் கிங் என்ற இந்த இராணுவ வீரர் ஜூலை மாதம் விஜயம் ஒன்றின் போது தென்கொரியாவிலிருந்து வடகொரிய பிராந்தியத்திற்கு எல்லையை கடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது இந்த செயல் அரசுக்கு எதிரானது என்றும் விசாரணைகள் முடிந்த பிறகு அவர் பியோங்யாங்கில் இருந்து நாடு கடத்தப்படுவார் என்றும் மாநில செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.

23 வயதுடைய இந்த சிப்பாய் வடகொரியாவினால் 03 மாத காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

KCNA அறிக்கைகளின்படி, அமெரிக்க இராணுவத்தின் மனிதாபிமானமற்ற நடத்தை, இனவெறி மற்றும் சமத்துவமின்மை காரணமாக அமெரிக்க சமூகத்தின் மீதான விரக்தியால் அமெரிக்க இராணுவ வீரர் வடகொரியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவ வீரர் 2021 ஜனவரி முதல் இராணுவத்தில் பணியாற்றி வரும் உளவுத்துறை நிபுணர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!